2016-11-28 17:01:00

பங்களாதேஷ் கத்தோலிக்கக் கோவில் மீது தாக்குதலும், திருட்டும்


நவ.,28,2016. பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் அருகே Mathbari  எனுமிடத்தில் உள்ள கத்தோலிக்க கோவிலினுள் கடந்த சனியன்று இரவு நுழைந்த 20 பேர், அக்கோவில் அருள்பணியாளரை மிரட்டி, கோவிலின் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோவிலில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோரை கட்டிப்போட்ட இந்த திருடர்கள், அருள்பணியாளரின் அறைக்குள் சென்று அவரிடம் கத்தியைக் காட்டி, அங்கிருந்த புகைப்படக்கருவி, மடிக்கணணி, கைப்பேசி, மற்றும், கல்லறைகளைப் பழுதுப்பார்ப்பதற்காக வைத்திருந்த பணம் என ஏறக்குரைய 1190 யூரோ மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இரவுப் பாதுகாவலர்களுள் ஒருவர், திருடர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமுற்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருடர்களின் மிரட்டல்களுக்கு உள்ளாகி பொருட்களை இழந்துள்ள Mathbari பங்குதள அருள்பணியாளர் தற்போது காவல் துறையில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.