2016-12-01 15:36:00

ஹாங்காங் கர்தினால் - திருவருகைக்கால மேய்ப்புப்பணி மடல்


டிச.01,2016. கிறிஸ்தவத் திருமணமும், குடும்பமும் நமது பிறரன்பு முயற்சிகளின் அடித்தளமாக அமையட்டும் என்று ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் அவர்கள், திருவருகைக்காலத்திற்கென வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில் கூறியுள்ளார்.

குடும்ப உறவுகளில், கூடுதல் அன்பையும், மன்னிப்பையும் காட்டுதல், குடும்ப உறவுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குதல், குடும்ப செபங்களை வளர்த்தல், சமுதாயப் பிரச்சனைகளைச் சந்திக்க, இளையோருக்கு, குடும்பத்தினரே பாடங்களைச் சொல்லித்தருதல் போன்ற வழிமுறைகளை கர்தினால் டாங் அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கத்தின் யூபிலியும், குடும்பங்களை மையப்படுத்தி நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்றமும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நல்ல வழிமுறைகளைக் கூறியுள்ளன என்று கர்தினால் டாங் அவர்கள் தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.