2016-12-07 17:01:00

லெபனான் அரசு, மக்களுக்கு வழங்கக்கூடிய கிறிஸ்மஸ் பரிசு


டிச.07,2016. லெபனான் நாட்டின் அரசியல் கட்சிகள் இணைந்து ஓர் அரசை உருவாக்குவது, அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒரு கிறிஸ்மஸ் பரிசு என்று, மாரனைட் முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

லெபனான் நாட்டின் அரசுத் தலைவராக, Michel Aoun அவர்கள் நியமனம் பெற்றபின்னரும் அந்நாட்டில் நிலையான ஓர் அரசு உருவாவதில் மோதல்கள் நிலவி வருவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்ட முதுபெரும்தந்தை Boutros Rai அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு முன்னர், ஓர் அரசியல் தீர்வு உருவானால், மக்கள் மகிழ்வர் என்று எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக லெபனான் நாட்டின் தலைமையில் உருவாகியுள்ள ஒரு வெற்றிடம் இன்னும் தொடர்ந்தால், அது மக்களின் நம்பிக்கையை பெரிதும் குலைத்துவிடும் என்று, கர்தினால் Boutros Rai அவர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.