2016-12-19 16:43:00

காங்கோ அமைதிக்கு செபிக்க விண்ணப்பம்


டிச.19,2016.  காங்கோ சனநாயகக் குடியரசில் உண்மையுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று, அந்நாட்டில் பொதுநலனுக்கான முக்கியத்துவத்துடன் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்றுவரும் காங்கோ சனநாயக குடியரசில், அமைதி நிலவ செபிக்குமாறு, தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் ஆட்சிக்காலத்தின் இறுதி நாளிலிருக்கும் அரசுத்தலைவர் ஜோசப் கபிலா அவர்கள் பதவி விலகுவதற்கான எவ்வித எண்ணத்தையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை எனவும், அரசுத்தலைவர் வேட்பாளர் Étienne Tshisekedi அவர்கள் தலைமையிலான போராட்டங்கள் புதிய வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இம்மாதம் 17ம் தேதி சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட தன் 80ம் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.