2017-01-20 15:12:00

பாசமுள்ள பார்வையில்...: பிறப்பு முதல், கடைசிவரை தாய்தான்


அம்மாவுக்கு ஈடு இணை யாருமில்லை. பெற்ற தாய் தன் இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு கொடுப்பார். ஆனால், அது குழந்தைப் பருவம் வரையே! ஆனால், பிறப்பு முதல் கடைசி நாள் வரை நம்மை குழந்தையாகவே கருதி பாலைத் தருவது கோமாதாவாகிய பசு. பால் மட்டுமில்லாமல், பாலில் இருந்து நமது பயன்பாட்டிற்கு உரிய தயிர், மோர், நெய் ஆகியவையும் கிடைக்கின்றன. பசுவின் பால், தாய்ப்பாலை மிகவும் ஒத்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் பாலை பருகுவதுண்டு. அதனால், பெற்ற தாய்க்கு நிகராக, பசுவைக் "கோமாதா' என அழைக்கிறோம். பாற்கடலில் இருந்து பிறந்த, தேவலோகப் பசுவான காமதேனு, பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது எனவும், இந்தப் பசு, கேட்டதை வாரி வழங்கும் எனவும் இந்து சமயம் கூறுகிறது. பால் தரும் பசுவில், தாய் முகத்தைக் கண்டு அழகு பார்த்தவர்கள், இந்தியர்கள். எங்கெல்லாம் உயர்ந்த தியாகமும் தன்னலம் கருதா தாராள மனமும் உண்டோ, அங்கெல்லாம் தாய் முகத்தைக் காணும் மனிதர்களாக, இயற்கையோடு ஒன்றித்து வாழும் சூழலை உருவாக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.