2017-01-21 16:02:00

2019ல் பானமாவில் உலக இளையோர் தினம்


சன.21,2017. பன்னாட்டு அளவில் நடைபெறும், அடுத்த உலக இளையோர் தினத்திற்கான தேதிகளை இவ்வெள்ளியன்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பானமா நாட்டுப் பேராயர் José Domingo Ulloa Mendieta.

உலக இளையோர் தினம், பொதுவாக, ஜூலையில் நடைபெறும்வேளை, காலநிலை காரணமாக, 2019ம் ஆண்டில், பானமாவில் நடைபெறவிருக்கும், உலக இளையோர் தினம், அவ்வாண்டு, சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை இடம்பெறும், என அறிவித்தார் பேராயர் Ulloa.

“நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக்.1,38)” என்ற அன்னை மரியாவின் சொற்கள், பானமா உலக இளையோர் தினத் தலைப்பாகும்.

போலந்தின் கிராக்கோவில், 2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் 31 வரை நடந்த உலக இளையோர் தினத்தின் நிறைவுத் திருப்பலியில், அடுத்த உலக இளையோர் தினம், 2019ம் ஆண்டில், பானமாவில் இடம்பெறும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.