2017-01-21 14:48:00

பாசமுள்ள பார்வையில்... "தேவை, ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே"


சான் பிரான்சிஸ்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர், ஜான் குவின் அவர்கள், தன் மறைமாவட்டத்தில் உழைக்க, புனித அன்னை தெரேசாவையும், சில சகோதரிகளையும் அழைத்திருந்தார். அருள்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஓர் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தார். அன்னை தெரேசா அவர்கள், அந்த இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். பின்னர், இல்லத்தின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை அகற்றச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளைக் கழற்றிவிடச் சொன்னார். இல்லத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில், ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயர் அவர்களே, இந்த இல்லத்தில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே" என்று சொன்னாராம். இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழ்ந்த புனித அன்னை தெரேசா, உலகில், இயேசுவின் பிரசன்னத்தை அதிகமாகப் பதித்தார் என்பதை, நாம் அனைவரும் அறிவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.