2017-01-23 16:22:00

நம்பிக்கையை பிறரிலும் உருவாக்க திருத்தந்தை அழைப்பு


சன.23,2017. 'அஞ்சாதீர்கள், நான் உங்களோடு இருக்கிறேன்.' நாம் வாழும் இக்காலத்தில் நம்பிக்கை, மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு குறித்து அனைவரிடமும் பகிர்வோம், என்பது திருத்தந்தையின் இத்திங்கள் தின டுவிட்டர் செய்தியாக இருந்தது.

என்றென்றும் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியுடன் நடைபோடுவதுடன், அந்த நம்பிக்கையை பிறரிலும் உருவாக்குவோம் என அழைப்புவிடுப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி இருந்தது.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'கடவுள் நமக்கு ஆற்றிய வியத்தகு செயல்களை ஒன்றிணைந்து அறிவிக்கும்போது, அன்பின் ஒன்றிப்பு முழுவதுமாக உணர்ந்து கொள்ளப்படுகிறது' என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.