2017-02-14 15:39:00

இறைவன் நம் பலவீனங்களின் சுமைகளை ஏற்றுக்கொள்கிறார்


பிப்.14,2017. “நம் பலவீனங்களின் சுமைகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நாம் நம் வாழ்வை, வலிமையோடு, மீண்டும் பொறுமையுடன் தொடங்குவதற்கு ஆண்டவர் உதவுகிறார் என்பதை அறிவது நல்லது” என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஸ்பெயின் நாட்டு Josefa Rodríguez, Amaro Pesquero தம்பதியர், மத்தியக் கிழக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு, நன்கொடைகள் வழங்கியதற்காக, அத்தம்பதியருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திருத்தந்தையிடமிருந்து இக்கடிதத்தைத் தாங்கள் எதிர்பாக்கவில்லை எனக் கூறிய, Josefa அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டவேளை, புதன் மறைபோதகத்தின்போது நன்கொடை பணத்தை ஒரு கவரில் வைத்து, துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, திருத்தந்தையிடம் வழங்கியதாகத் தெரிவித்தார்.

மிகுந்த முயற்சிகள் எடுத்து இப்பணத்தைச் சேகரித்ததாகவும் கூறினார் Josefa. ஓய்வுபெற்ற இத்தம்பதியர், இஸ்பெயின் நாட்டின் Fuenlabrada நகரைச் சேர்ந்தவர்கள்.  

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.