2017-02-20 16:41:00

லூத்தரன் ஆயருக்கு இவ்வாண்டின் நிவானோ அமைதி விருது


பிப்.20,2017. ஜோர்டன் மற்றும் புனித பூமியின் லூத்தரன் ஆயர் முனிப் யூனன் அவர்களுக்கு, இவ்வாண்டின் நிவானோ அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

புனித பூமியில் வாழும் பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரிடையே கலந்துரையாடல்களை ஊக்குவித்துவரும் ஆயர் யூனன்  அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதங்களிடையே பிரிவினைகளையும்  முரண்பாடுகளையும் ஊக்குவித்துவரும் தலைவர்கள் வாழும் இன்றைய காலத்தில், பிரிவினைகளை அகற்றி, அமைதிக்காக ஒன்றிணைந்து உழைத்திட அனைவரையும் தூண்டியதற்காக நிவானோ அமைதி விருது வழங்கப்படுவதாக அவ்விருது கழகம் அறிவித்துள்ளது.

1950ம் ஆண்டு யெருசலேமில் பிறந்த ஆயர் யூனன் அவர்கள், 2010ம் ஆண்டு முதல் லூத்தரன் உலக கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.