2017-03-04 15:29:00

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் கையேடு


மார்ச்,04,2017. ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சிக்கு உதவும் மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை வெளியிட்டுள்ளது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, 2016ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது கடிதத்தில், ஒப்புரவு அருளடையாளம், கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு உதவியாக, தவக்காலத்தில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சி பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை.

இந்தப் பக்தி முயற்சிக்கு உதவியாக, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை, 63 பக்க மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“நான் இரக்கத்தை விரும்புகிறேன் (மத்.9,13)” என்ற தலைப்பில், இம்மாதம் 24, 25 தேதிகளில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சி கடைப்பிடிக்கப்படுகின்றது. 

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பக்தி முயற்சியை, மார்ச் 17, வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்துவார்.

ஆதாரம் : CWN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.