2017-03-16 15:44:00

மார்ச் 24, 25 தேதிகளில், 'இறைவனோடு 24 மணி நேரங்கள்'


மார்ச்,16,2017. ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறையொட்டி நடைபெறும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' என்ற ஒப்புரவு அருளடையாள முயற்சி, இவ்வாண்டும், மார்ச் 24, 25 ஆகிய இரு நாள்கள் சிறப்பிக்கப்படும் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25ம் தேதி, மிலான் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, இவ்வாண்டு, 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளியன்று, புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை தலைமையேற்று நடத்துவார்.

இவ்வாண்டு கொண்டாடப்படும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு, 'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்தேயு 9:13) என்ற சொற்கள் மையக்கருத்தாக அமைந்துள்ளன.

மார்ச் 24, 25 ஆகிய நாள்கள் நடைபெறும் ஒப்புரவு அருளடையாள முயற்சியின் இறுதியில், Sassiaவில் உள்ள தூய ஆவியார் ஆலயத்தில், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் தலைமையில் மாலை வழிபாடு நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.