2017-03-22 16:42:00

பெரு நாட்டு மக்களுக்கு, இத்தாலிய காரித்தாஸ் உதவி


மார்ச்,22,2017. பெரு நாட்டில் நிகழ்ந்துள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு, நிதி உதவியும், பொருளுதவியும் வழங்கியுள்ளது.

அந்நாட்டில் இவ்வாண்டு சனவரி மாதம் முதல் பெய்து வரும் கனமழையால், இதுவரை, 6,500 வீடுகளும், 27 பள்ளிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

இதுவரை, இத்தாலிய காரித்தாஸ், அந்நாட்டிற்கு, 89 டன் எடையுள்ள, உணவு, மருந்து மற்றும் பிற பொருள்களை அனுப்பி, அங்குள்ள 2000த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவிகள் செய்துள்ளது.

மார்ச் 19, கடந்த ஞாயிறன்று மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரு நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்த வேளையில், பெரு ஆயர் பேரவை, அதே ஞாயிறன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக, தலத்திருஅவை முழுவதையும் செபத்தில் இணையும்படி கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.