2017-03-29 15:43:00

தவக்காலச் சிந்தனை : உண்மை நம்மை விடுவிக்கும்


மார்ச்,30,2017. இன்றைய ஊடகங்கள், அவர்களுக்குத் தேவையான செய்திகளை தேர்வு செய்து நமக்கு தருகின்றன என்பதை நாம் யாவரும் அறிவோம். பெரும்பாலான நேரங்களில், ஊடகங்கள், தங்களுடைய இலாப நோக்கங்களுக்காகவோ, அல்லது, பதவியில் இருப்பவர்களின் நலன்களுக்காகவோ, செய்திகளைத் தேர்வுசெய்து, திருத்தி அமைத்து, தங்களின் கருத்துக்களைத் திணித்து, நமக்குத் தருகின்றன. நாம் எந்த செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும், எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்பதில் நமது செய்தி ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உண்மைக்குச் சான்றுபகரும் இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாம், கேட்கும் செய்திகளிலுள்ள உண்மைகளையும் நன்மைகளையும் தேர்வு செய்து எடுத்துரைப்போம். நமது அன்றாட உரையாடல்களிலும், உண்மைகளைப் பேச உறுதிகொள்வோம். நாம் பார்த்த நிகழ்வுகள், அல்லது, கேட்ட செய்திகளை, நமது தேவைக்காக மாற்றம் செய்து, பிறருக்குத் தெரிவிப்பதை விட்டுவிடுவோம். உண்மை, நம்மை, அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் விடுவிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.