2017-04-04 16:44:00

இளையோரே! பொய் வாக்குறுதிகளால் மாற்றப்பட அனுமதியாதீர்


ஏப்.,04,2017. உன்னத வாழ்வை நோக்கிய ஓர் அழைப்பை முன்வைத்து, இளைஞர்களுக்கு வழங்கும் செய்தியாக, தன் ஏப்ரல் மாத செபக்கருத்தை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் மாத செபக்கருத்தை ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொய்யான விடுதைலைகளால் எமாற்றப்படுவதை விரும்பாத இன்றைய இளையோர், உயர்ந்த ஒரு கொள்கையை நோக்கிய பார்வையை தங்களில் கொண்டவர்களாக உள்ளனர் என்றும், அவர்கள், மாற்றத்தின் முன்னோடிகளாகச் செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருங்காலத்தைக் கையில் வைத்திருக்கும் இளையோர், மேலும் சிறந்த ஓர் உலகைக் கட்டியெழுப்புவதில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இந்தச் சவாலை அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியையும் இளையோரிடம் முன் வைத்துள்ளார்.

இளையோர் தங்கள் அழைப்பிற்கு இயைந்தவகையில் செயல்பட்டு, உலகின் முக்கிய நடவடிக்கைகளுக்காக தாராளமனதுடன் பதிலளிக்கவேண்டுமென அனைவரும் செபிப்போம் எனவும், தன் ஏப்ரல் மாத செபக்கருத்தில் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.