2017-04-24 16:32:00

ரிமினி கூட்டத்திற்கு,திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


ஏப்.24,2017. ஏப்ரல் 22, கடந்த சனிக்கிழமை முதல், 25 இச்செவ்வாய் முடிய, ரிமினியில் நடைபெறும், தூய ஆவியாரின் 40வது மறுமலர்ச்சி தேசிய கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அன்பினாலும், மன்றாட்டினாலும் திருஅவையை ஒருங்கிணைக்கும் தூய ஆவியார், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அளவற்ற கொடைகளைப் பொழிவாராக என்று திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின், தேசிய ஒருங்கிணைப்பாளர் சால்வாத்தோரே மார்த்தினெஸ் அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

தூய ஆவியாரின் திருநாளன்று, உரோம் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பிற்கு, தற்போது நடைபெறும் இக்கூட்டம், ஒரு தயாரிப்பாக உள்ளது என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, திருப்பீடச் செயலகத்தின் இணைச் செயலர் பேராயர் Angelo Becciu அவர்கள், திருத்தந்தையின் செய்தியை, தன் மறையுரையின் வேளையில் வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.