2017-04-25 16:57:00

மாற்றுத்திறனாளிகள் சமூகநலத் திட்டத்திற்கு திருத்தந்தை ஆதரவு


ஏப்.25,2017. உரோம், ஃபியூமிச்சினோ பகுதியில், Focene என்ற இடத்தில், புனித லூயிஜி கொன்சாகா பங்குத்தளத்தின், லூயிஜி கொன்சாகா கழகத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக நடத்தும் சமூகநலத் திட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆதரவளித்திருப்பது தங்களுக்கு வியப்பையும், அதேநேரம் ஊக்கத்தையும் அளித்துள்ளது என்று அக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

"Opera d'Amore" என்ற பெயரைக்கொண்ட இக்கழகம், Focene கடற்பகுதியில், La Madonnina என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகளுக்கென, கடற்கரை ஒன்றை நடத்தி வருகிறது. இந்தக் கடற்கரைக்கு, ஓராண்டு வாடகைப் பணத்தை, திருத்தந்தையின் தர்மச் செயல்களை நடத்திவரும் பேராயர் Konrad Krajewski அவர்கள், திருத்தந்தையின் பெயரில் வழங்கியுள்ளார்.  La Madonnina" கடற்கரைப் பணி முழுவதும், தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுகிறது. இக்கடற்கரைப் பகுதி, மக்கள் கடலில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.