2017-05-04 16:36:00

12 இறையடியாரின் வீரத்துவ புண்ணியங்களும் புதுமைகளும் ஏற்பு


 

மே 04,2017. மே 4, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 12 இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியம் நிறைந்த  வாழ்வு, மற்றும் அவர்களில் சிலரது பரிந்துரைகளால் நிகழ்ந்த புதுமைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.

புனிதர் மற்றும் அருளாளர் படிநிலைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால், ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் சமர்ப்பித்த இந்த விவரங்களை திருத்தந்தை ஏற்றுக்கொண்டு, தன் ஒப்புதலை அளித்தார்.

1870ம் ஆண்டு பிறந்து, 1957ம் ஆண்டு இறையடி சேர்ந்த இறையடியார், அருள்பணி Francesco Solano Casey என்ற கப்பூச்சியன் துறவி, அமல அன்னை புதல்வியர் என்ற துறவுசபையை நிறுவிய இறையடியார், Maria della Concezione ஆகியோரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் இறையடியார்களான Chiara Fey, மற்றும் Caterina di Maria ஆகியோரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளையும், குடும்பத் தலைவரான, இறையடியார் Luciano Botovasoa அவர்களின் மறைசாட்சிய மரணத்தையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

இவர்கள் 5 பேரையும் அருளாளர்களென அறிவிக்கும் வழிமுறைகளுக்கு திருத்தந்தை ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இறையடியாளர்களான இத்தாலியக் கர்தினால் Elia dalla Costa, மற்றும் வியட்நாம் கர்தினால் Francesco Saverio Nguyên Van Thuân ஆகியோரின் வீரத்துவமான புண்ணியம் மிகுந்த வாழ்வு சாட்சியத்தை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

அதேவண்ணம், இறையடியாளர்களான Giovanna Meneghini, Vincenza Cusmano, Maria Guadalupe Ortiz என்ற மூன்று அருள் சகோதரிகள், மற்றும், Alessandro Nottegar, Edvige Carboni என்ற இரு பொதுநிலையினர் ஆகிய அனைவரின் வீரத்துவமான புண்ணியம் மிகுந்த வாழ்வு சாட்சியத்தை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.