2017-05-08 16:49:00

பணி வழியாக தன் அதிகாரத்தை வெளிப்படுத்திய இயேசு


மே,08,2017. பணி வழியாக தன் அதிகாரத்தை வெளிப்படுத்திய, நம்பத்தகுந்த தலைவராக இயேசு உள்ளார் என இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நண்பராகவும், நமக்கு பக்கபலமாகவும் இருக்கும் இயேசு, நம்மை வழிநடத்தி, பாதுகாத்து, ஆறுதலளித்து குணப்படுத்துகின்றார் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆசைகளுக்காக தன் வாழ்வையே வழங்கி, மனிதகுல மீட்புக்கான வாயிலைத் திறந்தவர் இயேசு என மேலும் கூறினார்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் எடுத்துரைக்கும் 'நல்லாயன்' மற்றும் 'ஆடுகளின் நுழைவாயில்'  என்ற உருவகங்களைப் பயன்படுத்தி உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, அவரைப் பின்பற்றிச் செல்லும் ஆடுகள், பசும்புல் மேய்ச்சல் நிலத்தைக் கண்டடையும் என உரைத்தார்.

எம்மாவு செல்லும் வழியில் இரு சீடர்கள் இயேசுவை சந்தித்தபோது அடைந்த அனுபவத்தைக் குறித்தும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லாயனின் குரலை கண்டுகொள்வது என்பது, எப்போதும் எளிதானதல்ல, அதேவேளை, பல்வேறு பொய்யான குரல்களால் நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.