2017-05-12 16:43:00

பாத்திமா பயணத்தையொட்டி, ஸ்பானிய ஆயர்களின் அறிக்கை


மே,12,2017. மரியன்னையின் மாசற்ற இதயம், இறைவனைச் சந்திப்பதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உறுதியான பாதை என்று ஸ்பானிய ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்தில், மரியன்னை தோன்றியதன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாட, மே 12, 13 தேதிகளில் அங்கு திருத்தந்தை செல்வதையொட்டி, இஸ்பானிய ஆயர் பேரவை, இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுவரை, இத்திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தையர், 6ம் பவுல், 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர் பாத்திமா அன்னையைக் குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துக்களை, ஆயர்களின் அறிக்கை பதிவு செய்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்தில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, இஸ்பானிய ஆயர் பேரவையின் தலைவரும், Valladolid பேராயருமான கர்தினால், Ricardo Blázquez Pérez மத்ரித் பேராயர், கர்தினால் Carlos Osoro Sierra ஆகியோருடன், மேலும் பல ஸ்பானிய ஆயர்கள் கலந்துகொள்கின்றனர் என்று, ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.