2017-05-20 16:17:00

சீனாவிலுள்ள திருஅவைக்காக ஜெர்மன் கத்தோலிக்கர் செபம்


மே,20,2017. சீனாவிலுள்ள திருஅவைக்காகச் செபிக்கும் உலக நாளான மே 24ம் தேதியன்று, ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்கர் அனைவரும் தங்களோடு இணைந்து, அத்திருஅவைக்காகச் செபிக்குமாறு, ஜெர்மன் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜெர்மன் ஆயர் பேரவையின் பன்னாட்டு திருஅவை ஆணைக்குழுவின் தலைவரான Bamberga பேராயர், Ludwig Schick அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகிலத் திருஅவையோடும், திருத்தந்தையோடும் இணைந்து, சீனாவிலுள்ள திருஅவைக்காகச் செபிக்குமாறு கூறப்பட்டுள்ளது.. 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2007ம் ஆண்டில், சீனாவின் அன்னையாகிய Sheshan அன்னை மரியிடம், சீனாவையும், ஆசியா முழுவதையும் அர்ப்பணித்துச் செபித்தார் என்பதையும், பேராயர் Schick அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

Sheshan சகாய அன்னை விழாவான மே 24ம் தேதியை, சீனாவிலுள்ள திருஅவைக்காகச் செபிக்கும் உலக நாளாக அறிவித்தார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.