2017-05-25 16:22:00

சீன ஆயருக்கு தொடர்ந்து தடுப்புக்காவல்


மே,25,2017. சீனாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட Wenzhou ஆயர் Peter Shao Zhumin அவர்களை, தற்போது நான்காவது முறையாக விசாரணைக்கென அழைத்துள்ளது, அந்நாட்டு அரசின் மத விவகாரத் துறை.

புனித வாரத்தில் அரசு அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆயர்  Shao அவர்கள், மீண்டும் இம்மாதம் 18ம் தேதி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Wenzhou ஆயர் Vincent Zhu Weifang அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, திருப்பீட அனுமதியுடன் ஆயராக பொறுப்பேற்ற ஆயர் Shao அவர்களை, இதுவரை நான்கு முறை விசாரணைக்கென அழைத்து, அவ்வப்போது தடுப்புக் காவலிலும் வைத்துள்ளது, சீன காவல்துறை.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.