2017-05-31 16:27:00

மரியன்னை குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


மே,31,2017. "இறைவனின் இரக்கத்திற்கு வாழும் சாட்சிகளாக மாறும்வண்ணம், அன்னை மரியாவின் உறுதியான, உதவி செய்யும் நம்பிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்" என்ற சொற்கள், மே 31, இப்புதனன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மரியன்னையின் வணக்க மாதமான மே மாதத்தின் இறுதி நாளையும், மே 31ம் தேதி, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தத் திருநாளையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

@pontifex என்ற முகவரியில், திருத்தந்தை ஒவ்வொரு நாளும் வெளியிடும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மனி, இலத்தீன், போலந்து, அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் உலகினரைச் சென்றடைகின்றன.

மே 31, இப்புதன் முடிய, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,213 என்பதும், அவரது செய்திகளை ஆர்வமாய்த் தொடர்வோர் 1 கோடியே 7 இலட்சத்து, 87,238 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.