2017-06-06 16:29:00

வெனிசுவேலா பதட்ட நிலைகள் குறித்து திருத்தந்தையுடன் ஆலோசனை


ஜூன்,06,2017. 'நமது விசுவாசம் உறுதியானது என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்: வார்த்தை மனுவுருவானார், என்பது வெறும் கருத்துப்படிவம் அல்ல' என்ற சொற்களை இச்செவாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வியாழனன்று, வெனிசுவேலா நாட்டு ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாட உள்ளனர் என திருப்பீடத் தகவல்துறை அறிவித்துள்ளது.

வெனிசுவேலா நாட்டில் இடம்பெறும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் பதட்ட நிலைகளைக் குறித்து திருத்தந்தையுடன் விவாதிக்கும் நோக்கத்தில் வெனிசுவேலா ஆயர் பேரவை, இந்த சந்திப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.