2017-06-10 15:47:00

சீனாவில் தொடரும் கோவில் இடிப்புகளும் கைதுகளும்


ஜூன்,10,2017. மத்திய சீனாவின் Henan மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவக் கோவில் ஒன்றை இடித்து அழிவுக்குள்ளாகியுள்ள அந்நாட்டு காவல்துறை, 40 கிறிஸ்தவ விசுவாசிகளையும் கைது செய்துள்ளது.

பொதுத் தெரு ஒன்றைப் பயன்படுத்துவதற்கான வரியைக் கட்டவில்லை என்ற காரணம் காட்டி, இந்த அத்துமீறல் செயலையும், கைதையும் நிறைவேற்றியுள்ளது சீன காவல்துறை.

காவல்துறையினர், அரசு அதிகாரிகள் என 300 பேர் கொண்ட குழுவொன்று மேற்கொண்ட இந்த கோவில் இடிப்பு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அக்கோவிலின் மதபோதகரும், விசுவாசிகள் சிலரும் இன்னும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.