2017-06-13 15:53:00

நம் துன்பங்களை சுமப்பதுடன், ஆறுதலையும் தருகிறார் இயேசு


ஜூன்,13,2017. தன் பாடுகளின் வழியாக, நம் துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்ட இயேசு, துன்பத்தின் அர்த்தத்தை அறிந்தவராக, நம்மைப் புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்தி பலப்படுத்துவார்' என இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று, C-9 என்ற பெயரில் தனக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் திருத்தந்தை கலந்துகொண்டதால், வேறு எவரையும் இந்நாளில் அவர் சந்திக்கவில்லை.

கர்தினால்களின் இந்த உயர்மட்ட அவையிலுள்ள 9 அங்கத்தினர்களும், இந்நாளில் திருத்தந்தை நிறைவேற்றிய காலைத் திருப்பலியிலும் கலந்துகொண்டனர்.

C-9 என்ற இந்த உயர் மட்ட குழுவில், ஆசியாவிலிருந்து, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களும் அங்கத்தினராக உள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.