ஜூன்,13,2017. தன் பாடுகளின் வழியாக, நம் துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்ட இயேசு, துன்பத்தின் அர்த்தத்தை அறிந்தவராக, நம்மைப் புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்தி பலப்படுத்துவார்' என இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று, C-9 என்ற பெயரில் தனக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் திருத்தந்தை கலந்துகொண்டதால், வேறு எவரையும் இந்நாளில் அவர் சந்திக்கவில்லை.
கர்தினால்களின் இந்த உயர்மட்ட அவையிலுள்ள 9 அங்கத்தினர்களும், இந்நாளில் திருத்தந்தை நிறைவேற்றிய காலைத் திருப்பலியிலும் கலந்துகொண்டனர்.
C-9 என்ற இந்த உயர் மட்ட குழுவில், ஆசியாவிலிருந்து, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களும் அங்கத்தினராக உள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |