ஜூன்,22,2017. அந்தியோக்கிய கிரேக்க மெல்கிதே வழிபாட்டுமுறை திருஅவையின் முதுபெரும் தந்தையாக, பேராயர் ஜோசப் ஆப்சி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அங்கீகரித்து, தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லெபனின் Ain Traz எனுமிடத்தில் கூடிய கிரேக்க மெல்கிதே வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, இப்புதனன்று புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
1946ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, தமாஸ்கு நகரில் பிறந்த புதிய முதுபெரும் தந்தை யோசேஃப் ஆப்சி அவர்கள், தூய பவுல் மறைபோதக சபையில் சேர்ந்து 1973ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
லெபனன் நாட்டிலேயே பயின்று முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர், 2001ம் ஆண்டிலிருந்து தமாஸ்கு கிரேக்க வழிபாட்டுமுறை தலைமையகத்தில் பேராயராகப் பணியாற்றி வந்துள்ளார்.
ஜோசப் ஆப்சி என்ற இயற்பெயருடைய புதிய முதுபெரும் தந்தை, யோசேஃப் ஆப்சி என்ற பெயரை, தற்போது தேர்வு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |