2017-06-27 14:58:00

பாசமுள்ள பார்வையில்: 'நீங்கள் விலையேறப்பெற்றவர்'


'உண்மைப் பாசம்' என்ற தலைப்பில், ஜூலி பால்மெர் (Julie Palmer) என்ற பெண்மணி எழுதியக் கவிதையிலிருந்து சில வரிகள்:

பாசம்... பற்றுறுதியுடன் அடிமேல் அடியெடுத்து வைத்து மேலேறுகிறது.

களைப்பைப் பொருட்படுத்தாமல் மேலேறுகிறது.

கரடுமுரடான மேடு பள்ளங்களைக் கவனமுடன் கடக்கிறது.

கலங்கி நிற்கும் நீரைக் கடந்து செல்கிறது.

பாசம்... அக்கறையின்மை என்ற அலையைக் கடக்கிறது.

நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

தோல்வியால் துவண்டிருக்கும் இடங்களில், உற்சாகம் தரும் வார்த்தைகளைச் சொல்கிறது.

மற்றவரோடு ஒப்புமைப்படுத்தி, மனம் தளரும் சூழலில், 'நீங்கள் விலையேறப்பெற்றவர்' என்று முழங்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.