2017-06-28 16:40:00

கர்தினால் சாந்த்ரி, பல்கேரியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம்


ஜூன்,28,2017. கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், ஜூன் 30 வருகிற வெள்ளி முதல், ஜூலை 2 ஞாயிறு முடிய, பல்கேரியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார் என்று, இத்திருப்பேராயம் அறிவித்துள்ளது.

30ம் தேதி காலை பல்கேரியாவின் பிரதமர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளைச் சந்திக்கும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், பிற்பகலில், அந்நாட்டின் அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியரைச் சந்திக்கிறார்.

ஜூலை 1ம் தேதி, சனிக்கிழமை காலை பாத்திமா அன்னையின் நூற்றாண்டு நினைவாக, Pleven மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், சனிக்கிழமை பிற்பகலில் பல்கேரிய ஆயர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.

ஜூலை 2, ஞாயிறன்று, Sofia-Plovdiv மறைமாவட்டத்தில், திருத்தூதர் புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், மாரனைட் சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபின், மாலையில் உரோம் நகருக்குத் திரும்புகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.