2017-06-30 14:56:00

பன்மைத்தன்மை கொண்ட ஐரோப்பாவில் திருஅவையின் பங்கு


ஜூன்,30,2017. “பன்மைத்தன்மை கொண்ட ஐரோப்பாவில் திருஅவையின் பங்கு என்ன?” என்ற தலைப்பில், ஜூன் 30, இவ்வெள்ளியன்று, ருமேனிய நாட்டின் புக்காரெஸ்ட் நகரில், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் பொதுச் செயலர்களின் 45வது கூட்டம் ஆரம்பித்துள்ளது.

ஜூலை 03, வருகிற திங்கள் வரை நடைபெறுகின்ற இந்த நான்கு நாள் கூட்டத்தில், சமூக, கலாச்சார, அரசியல் மற்றும், பொருளாதாரப் பன்மைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் ஐரோப்பாவில், திருஅவையின் மறைப்பணி, திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பம், மற்றும், புலம்பெயர்ந்த மக்களுக்கு மேய்ப்புப்பணி, இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பு, அரசியல் மற்றும், பொது நிறுவனங்களோடு ஆயர் பேரவைகள் கொண்டிருக்கும் உறவுகள் போன்ற தலைப்புகளும், இக்கூட்டத்தில் இடம்பெறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.