2017-07-05 15:48:00

அர்ஜென்டீனா வானொலிக்கு, திருத்தந்தையின் ஒலிவடிவ வாழ்த்து


ஜூலை,05,2017. அர்ஜென்டீனா மக்கள், சுவர்களை எழுப்பாமல், பாலங்களை எழுப்பும் வண்ணம் தொடர்புகளை வளர்ப்பதற்காகவும், வதந்திகளைப் பரப்பாமல், விரிந்த கரங்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் தன் மகிழ்வையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டின், புவெனஸ் அயிரஸ் நகரில், "Cristo de los Villeros" என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள ஒரு வானொலிக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள ஒலிவடிவ வாழ்த்துச் செய்தி, இவ்வானொலியின் முதல் நிகழ்வாக ஒலிபரப்பானது.

பாலங்கள் கட்டுவதும், விரிந்த கரங்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதுமே ஒரு நாட்டை கட்டியெழுப்பும் அழகு என்று தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முயற்சியை, José León Suarez நகரில் துவங்கியுள்ள அருள்பணி José "Pepe" Di Paola அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.