2017-07-26 15:57:00

ஈராக்கின் 15 கோவில்களில், லூர்து அன்னையின் திருஉருவம்


ஜூலை,26,2017. ஈராக் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட நினிவே சமவெளிப் பகுதியில் உள்ள 15 கோவில்களில், லூர்து நகர் அன்னை மரியாவின் திரு உருவச்சிலை நிறுவப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் தீவிரவாத அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக Qaraqosh, Telkaif, Alqosh, Karamles ஆகிய ஊர்களில், இடித்துவிட்ட கிறிஸ்தவ கோவில்கள், தற்போது, மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கப்படும் இந்த ஆலயங்களில், லூர்து நகர் அன்னை மரியாவின் திரு உருவம் நிறுவப்படுவதற்கு, பிரெஞ்சு கத்தோலிக்கக் கழகம் முயற்சிகள் எடுத்து வருகிறது என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

தார்ப் மற்றும் லூர்து மறைமாவட்டத்தின் ஆயர் Nicolas Brouwet அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட அன்னை மரியாவின் திருஉருவங்கள், லூர்து திருத்தலத்திலிருந்து நினிவே சமவெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கோவில்களில் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.