2017-07-28 15:21:00

இஸ்பெயின் காரித்தாஸ் 13 நாடுகளுக்கு உதவி


ஜூலை,28,2017. இஸ்பெயின் ஆயர் பேரவையின் காரித்தாஸ் நிறுவனம், இவ்வாண்டில், உலகின் 13 நாடுகளில், முப்பதாயிரம் மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கென, இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட யூரோக்களை அனுப்பியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும், ஆசியாவிலுள்ள 13 நாடுகளில் மனித மாண்பைப் பாதுகாக்கவும், ஏழ்மையை ஒழிப்பதற்குமென 22 இலட்சத்து, 40 ஆயிரம் யூரோக்களை அனுப்பியுள்ளது, அப்பிறரன்பு நிறுவனம்.

ஹெய்ட்டி மற்றும், நிக்கராகுவாவில் நலிவுற்ற மக்களுக்கும், பெரு மற்றும் பொலிவியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தாய்லாந்து, மியான்மார் மற்றும் கிரேக்கத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்குமென இந்த உதவிகளை அனுப்பியுள்ளது, அந்நிறுவனம்.  

மேலும், ஆப்ரிக்காவில் கல்வி மற்றும் உணவுப் பாதுகாப்புக்கென உதவிகளைச் செய்துள்ளதாகவும், இஸ்பெயின் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.