2017-07-29 15:02:00

கொலம்பியாவில் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை


ஜூலை,29,2017. கொலம்பியாவின் Puerto Valdiviaவின் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த அருள்பணியாளரின் Santa Rosa de Osos மறைமாவட்ட ஆயர்  Jorge Alberto Ossa Soto அவர்கள், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 27, இவ்வியாழன் மற்றும், ஜூலை 28 இவ்வெள்ளி இரவுக்கும் இடையில் அருள்பணியாளர் Diomer Eliver Chavarría Pérez அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வன்முறை குறித்து ஆயர் பேரவை இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் Ossa Soto அவர்கள், அருள்பணியாளர் Pérez அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்துளார்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் உள்நாட்டுச் சண்டை நடந்த, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அருள்பணியாளர்கள் அடிக்கடி கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.