2017-07-31 15:50:00

இயேசுவின் கட்டுப்பாட்டின் கீழ் இஞ்ஞாசியாரைப் போல் வருவோம்


ஜூலை,31,2017. புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருவிழாவை முன்னிட்டு இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித இஞ்ஞாசியாரைப்போல் வாழ்வோம் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

'புனித இஞ்ஞாசியாரைப்போல் நாம் இயேசுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவும், அவரால் வழி நடத்தப்படவும் நம்மை அனுமதித்து, பிறருக்கு சேவை புரிவதில் நம்மை அர்ப்பணிப்போம்' என தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிற‌ன்று, த‌ன் டுவிட்ட‌ர் செய்தியை வெளியிட்ட‌ திருத்தந்தை பிரான்சிஸ் அவ‌ர்க‌ள், 'ந‌வீன‌ அடிமைத்தன‌த்தின் அனைத்து வ‌டிவ‌ங்க‌ளையும் எதிர்த்துச் செய‌ல்ப‌ட‌, ந‌ல்ம‌ன‌ம் கொண்டோரையும், அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறோம்'  என‌ அதில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.