2017-08-16 15:20:00

காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் வத்திக்கான் கருத்தரங்கு


ஆக.16,2017. காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் என்ற மூன்று கருத்துக்களை இணைத்து, நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி முடிய வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பிறை அறிவியல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பன்னாட்டு அறிஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், இக்கருத்தரங்கின் முடிவுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பாப்பிறை அறிவியல் கழகத்தின் இணையதளம் கூறியுள்ளது.

மருத்துவம், மக்களின் நலவாழ்வு, காற்று மாசுபாடு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, மறுசுழற்சி சக்தி என்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் அறிஞர்கள் இந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று இக்கழகம் கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை அடித்தளமாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாய நீதி, நன்னெறி தொடர்பான கேள்விகள் ஆகியவை இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று Zenit கத்தோலிக்க இதழ் கூறியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.