2017-08-21 16:39:00

இயேசுவின் வார்த்தைகளைக் கொடையாக வழங்கும் திருப்பயணம்


ஆக.,21,2017. வரும் ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18வரை சிலே நாட்டில் இடம்பெறவுள்ள திருத்தந்தையின் திருப்பயணம் குறித்த விவரங்கள் இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளன.

'என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளை தலைப்பாக கொண்டு இடம்பெற உள்ள இத்திருப்பயணம், இயேசுவின் வார்த்தைகளை இந்நாட்டிற்கு கொடையாக எடுத்துச் செல்வதாக இருக்கும் என, இப்பயண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்திருப்பயணத்திற்கென தயாரிக்கப்பட்டுள்ள இலட்சினை, வத்திக்கான் கொடியின் நிறமான மஞ்சள் மற்றும் வெள்ளையைக் கொண்டதாக, அதில் சிலுவை வரைந்ததாகவும்,  'என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளுடன், அதன் கீழ் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கையெழுத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

பல வரைபட நிபுணர்கள், ஊடகப் பணியாளர்கள், விளம்பரதாரர்கள், பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், நல்மனதுடையோர் ஒன்றிணைந்து இந்த இலட்சினையை தயாரித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.