2017-08-26 14:13:00

ஊக்கத்தை தூய ஆவியும், அருளை மரியும், சான்றை நாமும் தருவோம்


ஆக.,26,2017. கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவும் அருளை, அன்னை மரியா நமக்குப் பெற்றுத் தருவாராக, என்ற மையக் கருத்தைக் கொண்டு இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நற்செய்தி மதிப்பீடுகளுக்கு நேர்மையானவர்களாக இருந்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகர உதவும்படியாக, தூய ஆவியானவரால் உயிர்த்துடிப்பூட்டப்படும் அருளை, அன்னை மரியா நமக்குப் பெற்றுத் தருவாராக' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், 9 மொழிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டு வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.