2017-08-28 16:20:00

இறையருளில் நம்பிக்கை இழக்காது செயல்படுவோம்


ஆக.28,2017. இத்திங்களன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித அகுஸ்தின் திருவிழாவை முன்னிட்டு, அப்புனிதரின் வார்த்தைகளையே தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நீர் உமக்காவே எம்மைப் படைத்தீர். உம்மில் இளைப்பாறும்வரை, எம் இதயம் அமைதியின்றி தவிக்கிறது' என்ற புனித அகுஸ்தின் வார்த்தைகளை இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, புனித அகுஸ்தினின் தாய் புனித மோனிக்காவின் திருவிழாவையொட்டி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, 'புனித மோனிக்காவைப்போல், இன்று எத்தனை தாய்மார்கள், தங்கள் பிள்ளைகள் கிறிஸ்துவிடம் திரும்பிவரவேண்டும் என்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்? இறையருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்' என அதில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.