2017-09-25 16:57:00

ஒன்றிணைந்து பிறரன்பில் வாழும் நன்மைகள்


செப்.,25,2017. கூட்டுறவில் செயல்படுத்தப்படும் பிறரன்பின் நன்மைகள் குறித்து இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஒரே கூட்டுக்குடும்பமாக பிறரன்பில் வாழும்போது, அது நம்பத்தக்கதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்' என திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இதே நாளில், 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த ஈக்வதோர் நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 'பகிரப்படும் மகிழ்வு இரட்டிப்பாகின்றது' என்கிறது திருத்தந்தையின் ஞாயிறு தின டுவிட்டர் செய்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.