2017-10-09 16:39:00

திருத்தந்தை : அமைதியைத் தேடுதல், எல்லைகளற்ற பணி


அக்.09,2017. “அமைதியைத் தேடுதல் என்பது, வரையறையற்ற மற்றும் எல்லைகளற்ற ஒரு பணியாகும், இப்பணி, ஒருபோதும் நிறைவுறாத மற்றும், அனைத்து மக்களின் அர்ப்பணத்தையும், பொறுப்பையும் வலியுறுத்துவதாகும்” என்ற சொற்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று வெளியாயின.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் கசப்புணர்வை அனுபவிக்கையில், நன்மைக்காக இன்றும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும், அவர்களின் தாழ்ச்சியில், புதிய உலகின் விதை உள்ளது என்ற வார்த்தைகள் வெளியாயின.

இன்னும், திருவழிபாட்டு ஆண்டின் 28ம் ஞாயிறாகிய அக்டோபர் 15ம் தேதி காலை பத்து மணி 15 நிமிடங்களுக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்நிலை அறிவிப்பு திருப்பலியைத் தொடங்குவார்.

முத்திப்பேறுபெற்றவர்களான, ANDREA DE SOVERAL, AMBROGIO FRANCESCO FERRO, MATTEO MOREIRA மற்றும் அவரோடு சேர்ந்த 27 தோழர்கள், CRISTOFORO, ANTONIO, GIOVANNI FAUSTINO MÍGUEZ, ANGELO DA ACRI ஆகியோரை, அக்டோபர் 15, ஞாயிறன்று, புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.