2017-10-13 11:43:00

பாசமுள்ள பார்வையில்:சுமக்கையில் எடையில்லாதது குழந்தை மட்டுமே


லிண்டா பானண் என்பவர் பிறக்கும்போதே கைகளின்றி பிறந்தவர். இளவயதிலேயே இந்த குறையை பெரிதாகப் பொருட்படுத்தாமல், பல்வேறு திறமைகளை தனக்குள்ளேயே வளர்த்துக்கொண்டார். காலால் எழுதுவது, கிட்டார் வாசிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற பல்வேறு விடயங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டார். அவருக்கு திருமணமும் முடிந்து, ஒரு மகன் பிறந்தான். அவனும் கைகளின்றியே பிறந்தான். மனம் தளரவில்லை அந்தத் தாய். குழந்தைக்குரிய அனைத்துத் தேவைகளையும் அவரே கவனித்துக்கொண்டார். எவருடைய உதவியையும் அவர் நாடவில்லை. தன் மகனுக்குச் சட்டை போடுவது, உணவூட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது ஆகிய எல்லாவற்றையும் தானே கவனித்துக்கொண்டு, அதில் மகிழ்ச்சி கண்டார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார், 'கைகள் இல்லாத நீங்கள் உங்கள் மகனுக்காக இவ்வளவு வேலைகளையும் செய்வது சிரமமாக இல்லையா' என்று. லிண்டா சொன்னார், 'என் குழந்தைக்கு இதையெல்லாம் செய்ய முடிந்ததை எண்ணி எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் கிட்டும் திருப்தி வேறு எதிலும் இல்லை' என்று.

ஆம். தாயன்பைத் தாண்டிய அன்பு என்று எதுவும் இல்லை. அதன் வழியாகத்தான் இறையன்பையும் ருசிக்க முடிகிறது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.