2017-10-23 16:38:00

கானடா இளையோர்க்கு திருத்தந்தை காணொளிச் செய்தி


அக்.23,2017. “இருளில் சுடர்விடும் ஒளியை இயேசு நமக்குத் தந்துள்ளார், இந்த ஒளியைப் பேணி பாதுகாப்போமாக: இதுவே நம்மிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ள மாபெரும் சொத்து” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இத்திங்களன்று வெளியாயின.

மேலும், இளையோர், விசுவாசம் மற்றும் இறையழைப்பை தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில், கானடாவில் நடைபெற்ற இளையோர் கருத்தரங்கிற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து தங்கள் வாழ்வில் நுழைவதற்கு இளையோர் அனுமதிக்க வேண்டும், இதன் வழியாக, அவர்கள் தங்களையொத்த வயதினருக்கும், உலகிற்கும் கிறிஸ்துவை எடுத்துச் செல்லவும், நற்செய்திக்குப் பணியாற்றவும் இயலும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

கானடாவின் இளையோரே, முதல் சீடர்கள் கிறிஸ்துவை சந்தித்தது போன்று, உங்கள் சந்திப்பும் இருந்தால், அவரைப் பின்செல்வதில் வாழ்வின் அழகைக் கண்டுணர்வீர்கள்   என்றும் திருத்தந்தை, காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, கானடாவின் உப்பும் ஒளியும் என்ற தொலைக்காட்சி, இஞ்ஞாயிறு மாலையில் ஒளிபரப்பியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.