2017-10-27 15:49:00

திருப்பீடம், தாய்வான் 75 ஆண்டுகள் தூதரக உறவுகள்


அக்.27,2017. திருப்பீடத்திற்கும், தாய்வானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, தாய்பேய் நகரில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது.

தாய்வான் ஆயர் பேரவை, திருப்பீட தூதரகம் ஆகிய இரு அமைப்புகளால், தாய்பேய் Fu Jen கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில், இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய, Wenzhao வெளிநாட்டு மொழி கல்லூரியின் பேராசிரியர் அருள்சகோதரி Beatrice Leung அவர்கள், திருப்பீடத்திற்கும், தாய்வானுக்கும் இடையே நிலவும் நீண்ட கால உறவுகள், இவ்வுலகில் தேவையில் இருக்கும் மக்களுக்கு, உதவுவதற்கு எப்போதும் வழியமைத்துள்ளன என்று கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அருள்பணி Jac Kuepers அவர்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சமூகநல மையங்கள் போன்றவை வழியாக, தாய்வான் கத்தோலிக்க சமுதாயம் பொதுநலனுக்கு ஆற்றிவரும் நற்பணிகளை விளக்கினார்.

மேலும், திருப்பீடம், இந்த 75  ஆண்டு நிறைவு நிகழ்வை, உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 5ம் தேதி சிறப்பித்தது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.