2017-10-28 14:25:00

பாசமுள்ள பார்வையில் - தொடர்ந்து நல்லவராக வாழுங்கள்


புனித அன்னை தெரேசா, கொல்கத்தாவில் நடத்திவந்த ஓர் இல்லத்தின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள பொன் மொழிகள் இவை:

மக்கள் சுயநலம் கொண்டவராய் இருக்கலாம், இருப்பினும், அவர்கள் மீது அன்புகூருங்கள்.

நீங்கள் நல்லது செய்யும்போது, சுயநலம் கொண்டு அதை செய்கிறீர்கள் என்று உங்களைத் தூற்றலாம், இருப்பினும், நல்லது செய்யுங்கள்.

நீங்கள் செய்யும் நல்லவற்றை அடுத்தநாளே அவர்கள் மறந்துபோகலாம், இருப்பினும், தொடர்ந்து நல்லவராக வாழுங்கள்.

நேர்மை உங்களை பலமற்றவர்களாய் மாற்றலாம், இருப்பினும், நேர்மையுள்ளவராய் இருங்கள்.

தேவையில் இருப்போர், உங்களிடம் தேவைகளைப் பெற்றபின், உங்களைத் துன்புறுத்தலாம், இருப்பினும், தேவையில் இருப்போருக்கு உதவுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.