2017-11-14 16:23:00

கிறிஸ்துவின் ஒளிக்கு எவராலும் தடைபோட முடியாது


நவ.,14,2017. நமக்கு இறைவன் வழங்கும் ஒளியை எவராலும் தடை செய்யமுடியாது என்ற கருத்தை மையமாக வைத்து இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'கிறிஸ்து நம் இதயத்திலும், அவரின் நண்பர்களின் முகத்திலும் வழங்கும் ஒளியை எவராலும், எதனாலும் தடை செய்யமுடியாது' என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இத்திங்களன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, 'கிறிஸ்தவர் என்பவர் ஒருபோதும் எதிர்மறை மனப்பான்மையினராக இருக்கமுடியாது'  என உரைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.