2017-11-20 16:03:00

வறியோருடன் இணைந்து மதிய உணவருந்தியத் திருத்தந்தை


நவ.20,2017. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் திருப்பலிக்குப்பின், வத்திக்கானிலுள்ள அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அரங்கத்தில், ஏறத்தாழ 1,500 வறியோருடன் இணைந்து மதிய உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக வறியோர் நாளை முன்னிட்டு உரோம் நகருக்கு வருகை தந்த அனைத்து வறியோருக்கும், பல்வேறு கத்தோலிக்க கல்லூரிகளிலும், நிறுவனங்களிலும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அரங்கத்தில், வறியோருடன் இணைந்து மதிய உணவருந்துமுன், அவர்களுடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறர் மீது நட்புணர்வையும், நல்லெண்ணங்களையும் இதயம் முழுதும் சுமந்து செல்வோம்; இந்த உணவைத் தயாரித்தவர்களையும், நம் குடும்பங்களையும், நம் ஆசைகளையும், நல்வாழ்வையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்று செபிக்கவும் செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.