2017-12-07 15:56:00

ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயர் நியமனம்


டிச.07,2017. ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அனப்பரம்பில் (James Raphael Anaparambil) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 7, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

1962ம் ஆண்டு, கேரளாவின் கண்டக்கடவு எனும் ஊரில் பிறந்த ஜேம்ஸ் இரபேல் அவர்கள், 1986ம் ஆண்டு ஆலப்புழை மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் நகரின் உர்பானியா பல்கலைக் கழகத்தில், விவிலிய இறையியலில், முனைவர் பட்டம் பெற்ற அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அவர்கள், குரு மாணவர்களுக்கு ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர்.

கடந்த ஆண்டு முதல், விவிலியத்தின் மலையாள மொழிபெயர்ப்பில் திருத்தங்களைக் கொணரும் பணியில், அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அனப்பரம்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

ஆலப்புழை மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராக 2001ம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஆயர் ஸ்டீபன் அத்திப்பொழியில் அவர்கள், 73 வயது நிறைந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.