2017-12-26 14:17:00

பாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்


சென்னைக்கருகே, படூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அந்த மதுக்கடை முன்பாக அமர்ந்து, படிக்கும் போராட்டத்தை, 8 வயது சிறுவன் ஆகாஷ் முன்னெடுத்தார். ஏப்ரல் 2017ல் அந்த மதுக்கடையை அரசு மூடிவிட்டது.

''என்னைப் போல பல குழந்தைகள் அந்த மதுக்கடை வழியா போறாங்க. அங்க இருக்குற குளத்தில் அம்மா, அக்கா எல்லாரும் துணி துவைக்கிறாங்க. அங்க மதுக்கடை இருந்துச்சு. அதனால போரட்டம் நடத்தினேன். நான் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்கனு போலீஸ் சொன்னாங்க. பெரியவங்க சிலரும் சொன்னாங்க. கடையை மூடலைனா நான் வீட்டுக்கு போகமாட்டேன்னு சொன்னேன். என்னோட போரட்டத்தோட விளைவா அந்த கடையை மூடிட்டாங்க,'' என மதுவுக்கு எதிராக தான் மேற்கொண்ட போராட்டம் பற்றி விவரித்தபோது, ஆகாஷின் முகத்தில், நிஜமான, நிறைவானப் புன்னகை விரிந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.