2018-01-15 15:10:00

என் திருத்தூதுப்பயணத்தில் செபங்களோடு இணைந்து வாருங்கள்


சன.15,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தென் அமெரிக்காவின் இரு நாடுகளில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப்பயணத்தையொட்டி, தன் பயணத்திற்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்து, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

'சிலே மற்றும் பெரு நாடுகளில் நான் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணத்தில், உங்கள் செபங்களோடு என்னுடன் இணைந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'தங்கள் நாடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு, துன்பங்களை அனுபவிக்கும் மக்களை ஏற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, நம்மில் ஒருவராக ஒன்றிணைக்க உழைக்க வேண்டும்' என கூறியுள்ளார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உலக நாளையொட்டி, இந்த டுவிட்டர் செய்தி, திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.